உண்ணா நோன்பிருந்து உலகையே குலுங்க வைக்கும் வல்லமையும் சிங்கள அரசின் ஈழத்தமிழின கருணைக்கொலைகளை தடுக்கும் ராஜத்தந்திரமும் தமிழனைத்தவிர வேறு யாருக்கு இருக்கும்
ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உண்ணா நோன்பும்
ஆட்சியைப்பிடிக்க தமிழ் ஈழம் பெற்றுத்தருவேன் என்ற வாக்குறுதியும் போதாதா தமிழனின் வலிகளை ஆறச்செய்ய
விரைவில் இலங்கையில் இன விடுதலை பெறுவோம்
இங்குள்ளத்தமிழின அரசியல் தலைவர்கள் வழியில்
தேர்தல் வருகிறதல்லவா ?
தமிழனின் உயிர்களை விற்று வாக்கு வாங்கும் அரசியல் வியாபாரிகளே
இனி உங்கள் வாரிசுகள் குடிக்கும் தண்ணீரில் எங்கள் இரத்தமும் உண்ணும் உணவில் எங்கள் சதையும் கலந்திருக்கும்
வாழ்க தமிழ் நாட்டு அரசியல்
வாழ்க இந்திய ஜனநாயகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment