உணர்வு மிக்கவன் தமிழன்
திரை நடிகர்களின் உண்ணாவிரதமும்
பொதுக்கூட்டமும்தான்
தமிழனின் உணர்வினை உசுப்பேற்றும்
உடனே பொங்கியெழுவான்
அதன் பின் தான்
அது காவிரிப்பிரச்சனையா
ஒக்கனேக்கல் பிரச்சனையா
இராமேஸ்வரப் பிரச்சனையா
ஈழத்தமிழனின் பிரச்சனையா என்பதையே
தெரிந்துகொள்ளும் அளவிற்கு
உணர்வு மிக்கவன் தமிழன்
அந்த பொங்கியெழும் உணர்வையும்
வந்த நடிகன் வராத நடிகனை சொந்த வெறுப்பு ஏதுமின்றி
வராத காரணத்திற்க்கே ஏசுவதிலும்
நடிகர் சங்கம் தயாரிப்பாளச்சங்கதினை ஏசுவதிலும்
மூன்று மாதங்களாய்ப்புனிதக்காதல் புரிந்து பிரிந்த
நடிகையுடன் சேர்ந்தமர்ந்த நடிகன் பேசியது
எந்த சொப்புபோட்டு குளிச்ச என்றா ?
எத்தன ரவுண்டு அடிச்ச என்றா ? என பத்திரிகைகள் நடத்தும்
பரிசுக்கேள்விக்கு பதில் எழுதுவதிலும்
நேரடி ஒளிப்பதிவிலும் அரசியல் ஆதாயம் தேடும்
நேர்மையான தொலைக்காட்சிகளில் எதை நம்புவதென்பதிலும்
குழம்பிப்போய்
எதற்கு பொங்கிஎழுந்தோம் ? என்பதையே மறந்து
கரைவேட்டியிலும் நூறு இருநூறுகளிலும் வாழ்வை மேம்படுத்த
கட்சிகளிடம் கைநீட்டியதற்கு நன்றிக்கடனாய்
வாக்கு விற்றப்பணத்தில் மண்ணைவாரித்தன் தலையில்
வைத்துக்கொண்டான் உணர்வு மிக்கத்தமிழன்
இனி தமிழன் எந்த நாட்டிலும் கொல்லப்படமாட்டான்
அடிவாங்கமாட்டான் ஏனென்றால்
இந்தியா இருக்கிறது
தமிழனுக்கு நீதிகிடைக்காத நாடுகளுக்கு
பணஉதவியும் ஆயுத உதவியும் செய்ய
இறையாண்மை மிக்க நாடு
எங்கள் இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment